தடுப்புக்காவல் மரணம் பற்றி விசாரிக்க தனி போலீஸ் வாரியம் ஏற்கத்தக்கதல்ல

1 limதடுப்புக் காவல் மரணங்களைத் தடுக்க போலீசிலேயே தனி வாரியம் அமைக்கும் ஆலோசனை அபத்தமானது என்று ஒதுக்கித் தள்ளும் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங், தேவை போலீஸ் புகார்கள் மற்றும் ஒழுக்கக்கேட்டை விசாரிக்கும் சுயேச்சை ஆணையம் (ஐபிசிஎம்சி) தான் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) காலிட் அபு பக்கார் தலைமையில் செயல்படும் என்று கூறப்படும் அவ்வாரியம் திருப்திகரமானதல்ல, ஏற்கத்தக்கதல்ல என்று லிம் கூறினார்.

“பதவியேற்ற முதல் வாரத்திலேயே ‘வரலாற்றில் மிகவும் அரசியல் சார்ந்த ஐஜிபி’ என்று காண்பித்துக் கொண்டுள்ள அவர், ஆட்சியில் உள்ள அரசைக் காக்கத்தான் முன்னுரிமை கொடுக்கிறாரே தவிர, மலேசியர்களைக் குற்றச்செயல்களிலிருந்து காப்பாற்றுவதற்கோ மலேசியர்களுக்குக் கருத்துச் சொல்லவும் அமைதியாக ஒன்றுகூடவுமுள்ள அடிப்படை மனித உரிமைகள் பற்றியோ கவலைப்படுவதில்லை……

1 lim1“மலேசியர்களுக்கு இந்த ஐஜிபி மீதோ, தடுப்புக் காவல் மரணங்களைத் தடுப்பதற்கான போலீஸ் தனிக்குழு மீதோ  நம்பிக்கை இல்லை”, என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

போலீசில் அதிகார அத்துமீறலையும் ஊழலையும் விசாரிக்க விரிவான அதிகாரத்துடன் ஐபிசிஎம்சி அமைக்கப்பட வேண்டும் என 2005-இல் அரச விசாரணை ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

ஆனால், போலீஸ் படை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதற்குப் பதிலாக நேர்மை காக்கும் ஆணையம் ஒன்று- இஏஐசி- அமைக்கப்பட்டது. இது  குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அற்ற ஆணையமாகும்.

ஐபிசிஎம்சி-யை ஏற்படுத்தும் இயக்கத்தைத் தொடங்கும் துணிச்சல் காலிட்டுக்கு உண்டா என லிம் சவால் விடுத்தார். அவர் அதைச் செய்வாரானால் பக்காத்தான் ரக்யாட்டின் 89 நாடாளுமன்ற உறுப்பினர்களும் காலிட்டுடன் ஒத்துழைப்பர் என்றாரவர்.

 

 

 

TAGS: