பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ரகசியமாக மதம் மாற்றம் செய்வதை தடை செய்யும் அமைச்சரவை முடிவை அரசு ஊழியர்கள் மீறுவதால் அமைச்சரவை வலிமை இல்லாதவை என சமயங்களுக்கு இடையிலான மன்றம் குறை கூறியுள்ளது.
“2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சரவை செய்த அந்த முடிவு அத்தகைய சம்பவங்கள் அநீதியாக இருப்பதால் முஸ்லிம் அல்லாத மலேசியர்களைச் சாந்தப்படுத்தும் பொருட்டு எடுக்கப்பட்டதா ?”
“அமைச்சரவை முடிவுக்கு வலிமை ஏதும் உள்ளதா அல்லது அரசு ஊழியர்கள் தங்கள் விருப்பம் போல செயல்பட முடியுமா ?”
“பிரதமரும் அவரது அமைச்சரவையும் வழங்கும் உத்தரவுகளையும் அரசு ஊழியர்கள் அவ்வாறு செய்ய இயலுமா ?” என மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவே ஆலோசனை மன்றம் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் வினவியது.
நெகிரி செம்பிலானில் தமது இரண்டு பிள்ளைகளையும் பிரிந்து சென்று விட்ட கணவர் தமது ஒப்புதல் இல்லாமல் இஸ்லாத்துக்கு மதம் மாற்றி விட்டதைக் கண்டு பிடித்துள்ளது தொடர்பில் அந்த மன்றம் அறிக்கை விடுத்துள்ளது.
இந்திய மாது ஒருவர் பிரிந்து சென்ற தமது கணவர் தமது இணக்கம் இல்லாமல் தமது பிள்ளைகளை இஸ்லாத்துக்கு மாற்றி விட்டதால் அந்தப் பிள்ளைகளைப் பராமரிக்கும் உரிமையை இழக்கும் சூழ்நிலையை எதிர்நோக்கிய விவகாரம் மீது கடுமையான சர்ச்சை எழுந்த பின்னர் குழந்தைகளை ரகசியமாக மதம் மாற்றுவதற்கு 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசாங்கம் தடை விதித்தது.


























தாய் மொழிப் பள்ளிகளுக்கு மீண்டும் சாவு மணி அடிக்கத் தொடங்கிவிட்டார்களா?
என்னதான் அரசாங்கம் தேர்தலில் ஜெயித்தாலும்
தமிழர்களின் நிலை என்றும் அவல நிலைதான்
இன்னும் அந்த சரிசமமான நிலை வரவில்லையே
மத மாற்றம் சமந்தமாக மற்ற மதத்தைச் சார்ந்த மக்களுக்கு ஒரு தீர்வு எடுக்கும் போது அதை சட்டமாக்கி உறுதி செய்யப் படவேண்டும். நமது அமைச்சர்கள் அதில் ஏனோ தானோ என்று இருந்து விடுவதால்தான் இதைப் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி வந்து விடுகிறது. 2009 -ஆண்டு நாடாளுமன்றத்தில் எடுக்கப் பட்ட கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் அசட்டு தனமாக விட்தனால்தான் மீண்டும் பிரச்சனை தலை தூக்கி நிற்கிறது.