‘505 கறுப்பு தினம்’ திடீரென ஒன்று கூடிய 17 பேர் கைது

mob‘505 கறுப்பு தினத்தை’ ஒட்டி இன்று திடீரென ஒன்று கூடிய நிகழ்வில் கலந்து கொண்ட 17 பேரைப் போலீசார் தடுத்து வைத்துள்ளனர். அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களில் பெண்களும் பிள்ளைகளும் அடங்குவர் .

முதலாவது சம்பவத்தில் பிற்பகல் மணி 2.50 வாக்கில் சோஹோ கடைத் தொகுதிக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்த 15 பேர் (அவர்களில் ஒரு பெண்ணும் பல குழந்தைகளும் இருந்தனர்) போலீஸ் வாகனத்துக்குள் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்கள் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாக தம்மை ஏஎஸ்பி ஷுஹாய்மி என அடையாளம் காட்டிக் கொண்ட ஒர் அதிகாரி சொன்னார்.

அங்கிருந்து போலீஸ் வாகனம் அகன்றதும் கைது செய்யப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டைக் காட்டுவதற்காக டாங் வாங்கி போலீஸ் நிலையம் முன்பு கூடுமாறு வழிப்போக்கர்களை கேட்டுக் கொள்வதற்கு முயன்ற மாணவர் போராளி எஹ்சான் புஹாரியும் இன்னொருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை கால்நடையாக டாங் வாங்கி போலீஸ் நிலையத்திற்கு இரண்டு போலீஸ்காரர்கள் அழைத்துச் சென்றனர்