கண்ணயர்ந்தது பெரிய விசயமல்ல: காலிட்

khalidசிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், கடந்த வெள்ளிக்கிழமை சட்டமன்றத்திலும் பின்னர் செய்தியாளர் கூட்டத்திலும் சற்றுக் கண் அயர்ந்துவிட்டார்.

விடுவார்களா தொலைக்காட்சியினர். படம் பிடித்துக் காட்டி விட்டார்கள்.

உடலில் சர்க்கரை அளவு குறைந்ததால் காலிட் அரைத்தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார் என அவரின் உதவியாளர்கள் கூறினர்.

அதை காலிட்டும் தம் முகநூல் பக்கத்தில் ஒப்புக்கொண்டு, “ஒரு மனிதனுக்கு உடல்நலக் குறைவால் இப்படி நேர்வதுண்டு. மக்கள் என் பணியை வைத்து என்னை மதிப்பிட வேண்டும்”, என்று குறிப்பிட்டிருந்தார்.

அப்பதிவைப் பார்த்த பலரும் அவர் நலமுற வாழ்த்துத் தெரிவித்தனர்.