மூவாரிலும் லெடாங்கிலும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது

1 haze1இன்று காலை காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (ஏபிஐ) 750 என்னும் அபாய எல்லையைத் தாண்டியதை அடுத்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மூவாரிலும் லெடாங்கிலும் அவசரநிலை பிரகடனம் செய்திருக்கிறார்.

இயற்கைவள சுற்றுச்சூழல் அமைச்சர் ஜி.பழனிவேல் அவரது முகநூல் பக்கத்தில் இதை அறிவித்துள்ளார்.

மக்கள் வீடுகளிலேயே தங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்படும் என்று பழனிவேல் கூறினார்.   பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

-பெர்னாமா