குவாந்தானில் பள்ளிகள் நாளை திறக்கப்படும்

masksகுவாந்தானில் புகை மூட்டம் காரணமாக இன்று மூடப்பட்ட 120  பள்ளிக்கூடங்கள் நாளை திறக்கப்படும் என பாகாங் கல்வித் துறை இயக்குநர்  ரோஸ்டி இஸ்மாயில் கூறினார்.

என்றாலும் வகுப்பறைகளுக்கு வெளியில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு  அந்தப் பள்ளிக்கூடங்கள் அனுமதிக்கப்பட மாட்டா என அவர் சொன்னார்.

“எல்லா ஆசிரியர்களும் மாணவர்களும் நாளை பள்ளிக்கூடங்களுக்குத் திரும்ப  வேண்டும். வகுப்புக்கள் வழக்கம் போல நடைபெறும்,” என்றார் அவர்.

புகை மூட்டப் பிரச்னையை சமாளிப்பதற்கான வழி முறைகளை கல்வி அமைச்சு  எல்லாப் பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்பியுள்ளது.

 

TAGS: