பிரதமர்: தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டால் சமரசம் பற்றிப் பேசலாம்

1pmதேசிய சமரசம் பற்றிப் பேசுவதற்குமுன் மாற்றரசுக் கட்சி 13வது பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

“அரசாங்கம் தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றம் அமைக்க எண்ணுகிறது. அதில் இனம், சமயம், கொள்கை போன்ற விவகாரங்களை விவாதிக்கலாம். ஆனால், முதலில் முடிவுகளை ஏற்க வேண்டும்.”

கேள்வி நேரத்தின்போது லிம் கிட் சியாங்கின் கேள்விக்குப் பதிலளிக்கையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.

TAGS: