இரவுச்சந்தையை மூடவில்லை; சாலைகள்தான் மீண்டும் திறக்கப்படுகின்றன

malaccaமலாக்கா முதலமைச்சர் இட்ருஸ் ஹருன், ஜோங்கர் சாலை இரவுச்சந்தையை மூடவில்லை என்றும் இரவுச்சந்தைக்காக முன்பு மூடப்பட்ட சாலைகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன, அவ்வளவுதான் என்றும் விளக்கமளித்துள்ளார்.

“என் அறிக்கை தவறாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஜோங்கர் சாலை நெடுகிலும் வியாபாரம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை” என்றாரவர்.

முன்பு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மூடப்பட்ட சாலைகள்  நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக திறந்து விடப்பட்டுள்ளன  என்றவர் நேற்று உத்துசான் மலேசியாவிடம் தெரிவித்தார்.