முருகனின் கொலையை நாடாளுமன்றம் விசாரிக்க மகஜர்

1 muruganதாப்பாவில் பிகேஆர் வேட்பாளராக போட்டியிட்ட கே.வசந்த குமாரிடம் உதவியாளராக இருந்த கே. முருகன், தேர்தலுக்கு முதல்நாள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதன் தொடர்பில் அந்தக் கொலையைப் புலன்விசாரணை செய்ய நாடாளுமன்றம் ஒரு குழுவை அமைக்க வேண்டுமென அவரின் தாயார் பி.ராஜம்மா கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அதற்கான மகஜர் ஒன்றை ராஜம்மா,  இன்று நாடாளுமன்ற வாயிலில் பத்து காஜா எம்பி வி.சிவகுமாரிடம்  ஒப்படைத்தார்.

ஐஜிபி-இடம்  நான்கு மகஜர் கொடுத்தும் பதில் இல்லை என்பதால் நாடாளுமன்றத்திடம் மகஜர் கொடுக்க  முடிவு செய்யப்பட்டதாக ராஜம்மாவுடன் வந்திருந்த வசந்த குமார் கூறினார்.