தர்மேந்திரன் கொலையில் சந்தேகத்துக்குரிய நாலாவது நபரைத் தேடும் முயற்சி தொடர்கிறது

1 dharmபோலீசார், தர்மேந்திரன் கொலையில் சம்பந்தப்பட்டவராக சந்தேகிக்கப்படும் நாலாவது நபரை இன்னமும் தேடி வருவதாகக் கூறுகின்றனர்.

மே 22-இல் போலீஸ் காவலில் நிகழ்ந்த தர்மேந்திரனின் மரணம் தொடர்பில் மூன்று போலீஸ் அதிகாரிகள்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாலாமவர் தப்பி ஓடிவிட்டார். அவர் தலைமறைவாகி 41 நாள்கள் ஆகின்றன.

அவரை இன்னமும் தேடிவருவதாக போலீஸ் கூறுவதை டிஏபி-இன் செகாம்புட் எம்பி லிம் லிப் எங் நம்பவில்லை. என்னமோ நடக்கிறது என்கிறார்.

“போலீஸ் எதையோ மூடிமறைக்கிறார்கள். ஏன் அவரின் நிழல்படத்தை வெளியிடவில்லை? அதற்கும் விளக்கமில்லை”, என்றாரவர்.

ஆனால், சிஐடி துணை இயக்குனர் அப்துல் சாமா மாட் அதை மறுக்கிறார்.“விரைவில் அவரைப் பிடிப்போம்”, என்றார்.