அன்வார் பெரித்தா ஹரியான் மீது ‘அவதூறு’ வழக்குப் போடுவார்

anwar505 கறுப்பு தினப் பேரணிகளுக்கு பக்காத்தான் ராக்யாட் அந்நிய நிதிகளைப்  பெறுவதாக கூறப்பட்டதின் தொடர்பில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார்  இப்ராஹிம் பெரித்தா ஹரியான் நாளேடு மீது ‘அவதூறு’ வழக்குப்  போடவிருக்கிறார்.

முன்னாள் இந்தோனிசிய அதிபர் யூசோப் கல்லாவை மேற்கோள் காட்டி பெரித்தா  ஹரியான் வெளியிட்ட அந்தச் செய்தியை பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தொடர்ந்து சுட்டிக் காட்டுவதால் தாம் வழக்குத் தொடர முடிவு செய்ததாக அவர்  சொன்னார்.

தாம் அத்தகைய அறிக்கையை வெளியிடவில்லை என யூசோப் தெரிவிக்கும்  குறுஞ்செய்தி ஒன்றை அன்வார் மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது  வாசித்தார்.

அன்வார் அந்நிய நிதிகளை பெற்றுள்ளதாகக் கூறப்படுவது மீது அதிகாரிகள்  விசாரித்தனரா என்று கெப்பாளா பத்தாஸ் பிஎன் எம்பி ரீஸால் மெரிக்கான் நைனா  மரிக்கான் இதற்கு முன்னர் உள்துறை அமைச்சிடம் வினவியிருந்தார்.