‘Project IC’-இல் மூசா அமானுக்கும் தொடர்புண்டாம்

musa aman1சாபா ஆர்சிஐ சாபா முதலமைச்சர் மூசா அமானுக்கும் ‘Project IC’-இல் தொடர்புண்டு என்று அரச விசாரணை ஆணைய (ஆர்சிஐ)த்திடம் இன்று தெரிவிக்கப்பட்டது.

1991-இல் வெளிநாட்டவருக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டதும் அவர்களை அம்னோ உறுப்பினர்களாக பதிவுசெய்ய அமைக்கப்பட்ட பணிக்குழுவுக்கு மூசா தலைவராக இருந்தார் என முன்னாள் பார்டி பெர்சத்து சாபா(பிபிஎஸ்) அரசியல்வாதி டாக்டர்  சொங் எங்  லியோங் கூறினார்.

“அம்னோ சாபாவுக்குள் அடியெடுத்து வைத்தபோது அப்பணிக் குழு அமைக்கப்பட்டது. அதற்கு மூசா அமான் தலைமை தாங்கினார்”, என்றாரவர்.