ஜாமீன் செலுத்திய பின்னர் அல்விவி ஜோடி விடுவிக்கப்பட்டனர்

alviviசெக்ஸ் வலைப்பதிவாளர்களான அல்வின் தான் -னும் விவியன் லீ-யும் 30,000  ரிங்கிட் ஜமீன் தொகையை கட்டிய பின்னர் இன்று விடுவிக்கப்பட்டனர்.

சிறைச்சாலை மோசமானதாக இல்லை என அவர் நீதிமன்றத்துக்கு வெளியில்  நிருபர்களிடம் கூறினார்.

தான் சுங்கை பூலோ சிறையிலும் லீ காஜாங் சிறையிலும் கடந்த எட்டு நாட்களாகத்  தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

விடுவிக்கப்படுவதற்கு முன்னர் ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திடுவதற்காக  அவர்கள் இருவரும் இன்று காலை பத்து மணி வாக்கில் கோலாலம்பூர் உயர்  நீதிமன்ற ஜாமீன் மய்யத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.

20 நிமிடங்களில் எல்லா நடைமுறைகளும் முடிந்த பின்னர் அவர்கள் தனித்தனி  வாகனங்களில் புறப்பட்டனர்.