‘குளியலறை கேண்டீனை’ அம்பலப்படுத்திய தாய்க்கு கடத்தல் மருட்டல்

canteenகுளியலறை கேண்டீன் சர்ச்சை தொடர்பான படங்களை வெளியிட்ட தாய்க்கு  கடத்தல் மருட்டல்கள் வந்துள்ளன. அதே வேளையில் ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப்  பள்ளியில் உள்ள அவரது புதல்வியை வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும்  கேலி செய்கின்றனர்.

தமது சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தப் போவதாகவும் புதல்வியைக் கடத்தப்  போவதாகவும் அடையாளம் தெரியாத தனிநபர்கள் தொலைபேசி வழி தம்மை  மருட்டுவதாக குணேஸ்வரி கெல்லி என்ற அந்தத் தாய் சொன்னதாக சன் நாளேடு  செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த மருட்டல்கள் தொடர்பில் தாம் போலீசில் புகார் செய்துள்ளதாகவும் முகநூலில் அந்தப் படங்களைச் சேர்த்த குணேஸ்வரி சொன்னார்.

பள்ளிக்கூட்டத்தில் தாம் கேலி செய்யப்படுவதால் தமது 9 வயது புதல்வி சோர்ந்து  போயிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த விஷயத்தை இனம், சமயம் சம்பந்தப்பட்ட விவகாரமாக்க தாம் ஒரு போது  எண்ணியதில்லை என வலியுறுத்திய அந்தத் தாய், குளியலறையில் பிள்ளைகள்  உணவை உட்கொள்ளும் போது ஏற்படக் கூடிய உடல் ஆரோக்கியப் பிரச்னைகள்  பற்றியே தாம் கவலைப்பட்டதாக தெரிவித்தார்.

அந்தப் பள்ளிக்கூடத்திற்கு எதிராக குணேஸ்வரியும் போலீசில் புகார் செய்துள்ளார். அதனையும் சேர்த்து இது வரை மொத்தம் 14 புகார்கள் பள்ளிக்கூடத்துக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ளன.