போலீஸ் திடீர் மரணத்தைப் பதிவுசெய்யவில்லை என்ற செய்தியால் எரிச்சலடைந்தது சுவாராம்

1 gangaதடுப்புக்காவலில் இருந்த ஆர். குணசேகரன் இறந்தபோது அந்தத் திடீர் மரணம் குறித்து புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என செந்தூல் போலீஸ் தலைவர்  ஏசிபி ஜக்கரியா பகான் கூறியிருப்பதை சுவாராம்  குறைகூறியுள்ளது.

“குணசேகரனின் மரணம் குறித்து போலீஸ் இதுவரையிலும் புகார் எதையும் பதிவுசெய்யவில்லை. இது எப்படி சாத்தியம்?”, என்றந்த என்ஜிஓ வினவியுள்ளது.

நேற்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில், குணசேகரின் துணைவியார் கங்கா கெளரி  தொடுத்துள்ள  சிவில் வழக்கில் சாட்சியமளித்த ஜக்கரியா, திடீர்மரணம் மீது அறிக்கை விடுப்பது போலீசின் பொறுப்பு அல்ல என்றும் அது மருத்துவ அதிகாரிகளின் வேலை என்றும் கூறியிருந்தார்.