தகவலை தெரிவித்த தாயை அச்சுறுதுகின்றவர்களை அம்பலப்படுத்துவது பற்றி மஇகா சிந்திக்கிறது

canteen‘குளியலறை கேண்டீன்’ பற்றிய தகவலை வெளியிட்டவருக்கு மருட்டலை  விடுக்கின்றவர்களுடைய தொலைபேசி எண்களை அம்பலப்படுத்த மஇகா வியூக  இயக்குநர் எஸ் வேள்பாரி திட்டமிடுகிறார்.

“கோழைத்தனமான அந்தச் செயலுக்கு பொறுப்பான தனிநபர்கள் தாங்கள்  செய்துள்ள காரியத்தின் விளைவுகளை” உணரும் பொருட்டு தமது நாளேடான  தமிழ் நேசனில் தொலைபேசி எண்களை வெளியிடுவது பற்றி சிந்திப்பதாக அவர்  சொன்னார்.

அந்தத் தகவலை வெளியிட்டவரும் ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளியில் பயிலும்  மாணவி ஒருவரின் தாயாருமான குணேஸ்வரி கெல்லியுடன் தாம் பேசியதாகவும்  வேள்பாரி சொன்னார்.

“தமக்கு மருட்டலை விடுத்தவர்களுடைய எண்களை எனக்கு அனுப்புமாறு நான்  அவரைக் கேட்டுக் கொண்டுள்ளேன். நான் அவர்களைக் கவனித்துக் கொள்வேன்.”

“அத்துடன் ஆசிரியர்கள் தொடர்ந்து அவரது புதல்வியை மிரட்டி வந்தால் நான்  அந்தப் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் நான் பேசுவேன்,” என்றும் வேள்பாரி  சொன்னார்.