சஞ்சீவனை பேட்டிகாண போலீஸ் காத்திருக்கிறது

hadiசெர்டாங் மருத்துவமனையில் நினைவிழந்த நிலையில் உள்ள  குற்ற-எதிர்ப்பு ஆர்வலர் ஆர்.சஞ்சீவனுக்கு நினைவு திரும்பியதும் அவரைச் சந்தித்துபேச போலீஸ் காத்திருக்கிறது.

குற்றப்புலன் விசாரணை துறை தலைவர் ஹாடி ஹோ அப்துல்லா இதனைத் தெரிவித்தார். ஜூலை 17ஆம் தேதி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்தபோது காரில் சஞ்சீவனுடன் இருந்த அவரின் நண்பரை போலீஸ் ஏற்கனவே சந்தித்து விட்டது.

“சில தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றின்மீது விசாரணை நடத்துகிறோம்”, என்றாரவர்.