இஸ்தானா வந்த கூட்டத்தை போலீஸ் தடுத்துவைத்து விசாரணை

kuபேரரசரின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு இஸ்தானா நெகாராவுக்கு வெளியில் திரண்ட ஒரு கூட்டத்தை போலீஸ் பிடித்து வைத்துள்ளது.

“அவர்களின் நோக்கம் என்னவென்பது தெரிய வேண்டும். அதற்காக தடுத்து வைத்திருக்கிறோம்”,என கோலாலும்பூர் சிஐடி தலைவர் கூ சின் வா கூறினார்.

இரண்டு சிறார்கள் உள்பட 12 பேரடங்கிய அக்கூட்டம் மூன்று வாகனங்களில் வந்திறங்கியதாக  பெர்னாமா செய்தி ஒன்று கூறுகிறது. அவர்கள் தங்களை “Kumpulan Panji Hitam” எனக் கூறிக்கொள்கிறார்கள்.