மாய்ஸ் நான்கு ஷியா மய்யங்களை கண்டு பிடித்துள்ளது

maisசிலாங்கூரில் ஷியா போதனைகள் பரப்பப்படும் நான்கு மய்யங்களை மாய்ஸ்  எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகார மன்றம் கண்டு பிடித்துள்ளது.

அந்த மய்யங்களில் ஷியா நடவடிக்கைகள் வெளிப்படையாக
மேற்கொள்ளப்படுகின்றன என்று மாய்ஸ் தலைவர் முகமட் அட்ஸிப் முகமட் ஈசா  தெரிவித்தார்.

அம்பாங், கோம்பாக், கிள்ளான், பூச்சோங் ஆகியவற்றில் அந்த மய்யங்கள்  உள்ளன.

ஷியா போதனைகள் முஸ்லிம்களை பல பிரிவுகளாக பிளவுபடுத்தி
அமைதியைச் சீர்குலைத்து விடும் என்பதால் அவை பரப்பப்படுவதை நிறுத்த  வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

“அந்தப் பிரச்னையை அதிகாரிகளும் முஸ்லிம்களும் கடுமையாக கருதி ஷியா  போதனைகள் பரப்பப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் சிலாங்கூர் சுல்தான்  கேட்டுக் கொண்டுள்ளார்,” என்றும் அவர் விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.