குவான் இயு அந்திம காலத்தில் அமைதியாக இருப்பது நல்லது: கர்பால்

1 leeபக்காத்தான் ரக்யாட்டுக்கு ஆட்சி செய்யும் திறன் இல்லை என்று கூறியுள்ள சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் இயுவை டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங் சாடியுள்ளார்.

இன்னமும் உலகின் இந்தப் பகுதியில் “முக்கியமான தலைவர்”  என்ற  நினைப்பு லீக்கு என  கர்பால் சாடினார்.  “அவரது காலம் முடிந்துவிட்டது.  அந்திம காலத்தை அமைதியாக முடித்துக்கொள்வது நல்லது”,  என்றாரவர்.

லீ, ஆகக் கடைசியாக வெளிவந்துள்ள அவரது One man’s view of the world  என்னும் நூலில் பக்காத்தானை “சந்தர்ப்பவாத கும்பல்” என்று வருணித்திருக்கிறார்.