போலீசார் தவறு செய்த செடிலி புசார் ஒய்வுத் தல நிர்வாகியைக் கைது செய்தனர்

surauஜோகூர் போலீசார் விசாரணைகளுக்கு உதவியாக கோத்தா திங்கியில் உள்ள  செடிலி புசார் ஒய்வுத் தல நிர்வாகியைக் கைது செய்துள்ளனர்.

45 வயதான அந்த நபர் நேற்று பிற்பகல் மணி 2.00க்கு கைது செய்யப்பட்டதாக  ஜோகூர் மாநிலப் போலீஸ் தலைவர் முகமட் மொக்தார் முகமட் ஷரிப் கூறினார்.

மாநில துணைப் போலீஸ் தலைவர் இஸ்மாயில் யாத்திம் தலைமையிலான சிறப்புக்  குழு ஒன்று அந்த விவகாரத்தைக் கவனித்து வருவதாக அவர் மேலும் சொன்னார்.

இதனிடையே சூராவ் மற்ற சமய சேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கு  அனுமதித்ததாகக் கூறப்படும் ஒய்வுத் தல உரிமையாளர் மீது எடுக்கப்பட  வேண்டிய நடவடிக்கையை ஜோகூர் பாத்வா குழு முடிவு செய்யும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.