பெக்கானில் பிரதமரது திறந்த இல்ல உபசரிப்பில் 80,000 பேர் கலந்து கொண்டனர்

najibபெக்கான் தாமான் தாசெக் சுல்தான் அபு பாக்காரில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  இன்று நடத்திய நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 80,000க்கும்  மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள்.

பாகாங் சுல்தானா ஹஜ்ஜா கால்சோம், பாகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கோப்,  பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மான்சோர் ஆகியோரும் அங்கு இருந்தார்கள்.

பெக்கானைச் சேர்ந்த 160 உணவு விநியோகிப்பாளர்கள் அமைத்திருந்த 200க்கும்  மேற்பட்ட கூடங்களில் நோன்புப் பெருநாள் உணவு வகைகள் வழங்கப்பட்டன  என்று பெக்கான் அம்னோ தொகுதித் துணைத் தலைவர் இஷாக் முகமட் கூறினார்.