சந்தேக நபர்களை நீதிமன்ற ஆணையுடன் 72 நாள்கள் தடுத்து வைக்கலாம்

1 igp1959 ஆம்  ஆண்டு  குற்றத்தடுப்புச் சட்டம் (1983-இல் திருத்தப்பட்டது)  சந்தேக நபர்களை  72 நாள்கள் விசாரணைக்காக தடுத்து வைக்க வகை செய்வதாகக் கூறுகிறார்  இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார்.

ஆனால், அவ்வாறு தடுத்துவைக்க நீதிமன்ற உத்தரவைப் பெறுவது அவசியமாகும்.

அச்சட்டத்தின்கீழ் இப்போது நாடு முழுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையில் இதுவரை 200 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக காலிட் பினாங்கில் கூறினார்.

அம்மாநிலத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் என்று ஐயுறப்படும்  ஐவர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி அறிவிப்பதற்காக காலிட் பினாங்கு சென்றுள்ளார்