ஐவர் சுடப்பட்டதன் பின்னே உள்ள மர்மம் விளக்கப்பட வேண்டும்

1 dhinaதிங்கள்கிழமை பினாங்கு, சுங்கை நிபோங்கில் இரகசிய கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மீது தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

“போலீசார் ஏன் அவர்களைக் கைது செய்ய முற்படவில்லை?”, என பினாங்கு மாநில மஇகா இளைஞர் பகுதித் தலைவர் ஜே.தினகரன் ஓர் அறிக்கை விடுத்திருக்கிறார்.

போலீஸ் கூறுவதுபோல் அங்கே துப்பாக்கிச் சூடுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டிருந்தால், சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல்கள் முன் அறையில் கிடந்திருக்க வேண்டும் என்று தினகரன் கூறினார்.

“இந்த மர்மத்தை போலீஸ்தான் விளக்க வேண்டும்”, என்றாரவர்.

தம் கட்சி குற்றச்செயல்களை ஆதரிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், இறந்தவர்களின் குடும்பத்தார் கேட்கும் கேள்விகளை  எடுத்துரைக்கும் கடமை அதற்கு உண்டு என்றார்.