ஸாஹிட், ராபிஸி மீது போட்ட 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை மீட்டுக் கொள்கிறார்

ZahidAwan Megah Sdn Bhd பிரச்னை மீது பாண்டான் எம்பி முகமட் ராபிஸி ராம்லி  மீது தாம் தொடுத்த 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை முன்னாள் தற்காப்பு  அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி மீட்டுக் கொண்டிருக்கிறார்.

உயர் நீதிமன்ற நீதி ஆணையாளர் லீ ஹெங் சொங் முன்னிலையில் அந்த  விவகாரம் தீர்க்கப்பட்டுள்ளது.

Awan Megah-வை Boustead எடுத்துக் கொண்ட விஷயத்தில் இப்போது உள்துறை  அமைச்சராக இருக்கும் ஸாஹிட் சம்பந்தப்படவில்லை என்பதில் ராபிஸி  மனநிறைவு கொண்டதைத் தொடர்ந்து அந்த வழக்கு மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.