புக்கிட் அமான்: குண்டர் கும்பல் உறுப்பினர்களில் 71 விழுக்காட்டினர் இந்தியர்கள்

policeபோலீஸ் பதிவுகளில் உள்ள குண்டர் கும்பல் உறுப்பினர்களில் 71 விழுக்காட்டினர் இந்தியர்கள் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) இயக்குநர் ஹாடி ஹோ அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜுலை 30ம் தேதி வரையில் போலீஸ் பதிவுகளில் உள்ள குண்டர் கும்பல் உறுப்பினர்களில் 71 விழுக்காட்டினர் இந்தியர்கள், 23 விழுக்காட்டினர் சீனர்கள்,  மலாய்க்காரர்கள் 5 விழுக்காட்டுக்கும் குறைவு என ஹாடி இன்று குற்றத்தடுப்பு  கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.

பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட வேவுத் தகவல்கள் அடிப்படையில் போலீசார்  சந்தேகத்துக்குரிய 40,000க்கும் மேற்பட்ட குண்டர் கும்பல் உறுப்பினர்களைக்  கண்டு பிடித்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

இந்தியர் குண்டர் கும்பல்கள் தென் தாய்லாந்தை பாதுகாப்பான இடமாகவும்  கட்டமைப்புக்கான இடமாகவும் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தமது விளக்க  உரையில் தெரிவித்தார்.