கோகிலன்: வேதா துணை அமைச்சர் வேலையைத் தானே செய்கிறார்

kogilan pillaiபிரதமர் துறை துணை அமைச்சர் பி வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என சக  அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ள வேளையில் வேதமூர்த்தி தமது பணிகளை  தொடர வேண்டும் என கெராக்கான் உதவித் தலைவர் ஏ கோகிலன் பிள்ளை  அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

vethaபினாங்கு சுங்கை நிபோங்கில் கடந்த வாரம் சந்தேகத்துக்குரிய ஐந்து இந்திய  குண்டர் கும்பல் உறுப்பினர்களை போலீசார் சுட்ட சம்பவம் குறித்து தமது  ‘கவலையைத் தெரிவித்த போது’ வேதமூர்த்தி துணை அமைச்சர் என்ற முறையில்  தமது பணியைத் தான் செய்துள்ளார் என கோகிலன் சொன்னார்.

இந்திய சமூகத்தை மேம்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பிரதமர் துறை  துணை அமைச்சர் என்ற தமது வேலையைத் தானே வேதமூர்த்தி செய்தார்.”

மனித உரிமைகள் அடிப்படையில் வன்முறைகள் அநீதிகள் ஆகியவற்றுக்கு  எதிராக இந்திய சமூகத்தை பொதுவாக முழு சமுதாயத்தையும் அவர் தற்காக்க  முயன்றுள்ளார்,” என கோகிலன் விடுத்த அறிக்கை தெரிவித்தது.