கோயில் விவகாரத்தில் ‘பொய் சொல்கிறார்’ தெங்கு அட்னான்: மஇகா குற்றச்சாட்டு

1-sivaragகோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் 101-ஆண்டு பழமை வாய்ந்த முனீஸ்வரர் கோயிலின் ஒரு பகுதியை உடைக்கவில்லை, ஒரு கடையைத்தான் உடைத்தது என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் ஒரு பொய்யைப் பரப்பி வருகிறார் என மஇகா இளைஞர் பகுதி குறைகூறியுள்ளது.

அதன் செயலாளர் சி.சிவராஜா, கோயில் அமைந்துள்ள ஜாலான் பி.ரம்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

“ஒரு சிறுவனுக்குக்கூட தெரியும் அது கோயிலா, உணவுக்கடையா என்பது”, என்றாரவர்.

சிவராஜா,  அமைச்சின் சிறப்பு அதிகாரி ஆர்.ரமணனையும் சாடினார். இந்துகளின் முறையான பழக்கவழக்கங்கள் குறித்து அவர் தெங்கு அட்னானுக்கு  ஆலோசனை கூறி இருக்க வேண்டும் என்றாரவர்.