கழிவறை கேமிராக்களை அகற்றுமாறு அமைச்சு உத்தரவு

1cctvஎஸ்எம்கே ஸ்ரீ செந்தோசா கழிவறைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களை உடனடியாக அகற்றுமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

“கழிவறையில் அது இருப்பது சரியல்ல. அதை எடுத்துவிடுமாறு கூறியுள்ளோம்”, என கல்வி அமைச்சர் (II), இட்ரிஸ் ஜூஸோ, புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்பள்ளி அமைச்சின் அனுமதியின்றி ரிம100,000 செலவில் 64 கேமிராக்களைப் பொருத்தியுள்ள தகவலை த சன் செய்தித்தாள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தது.

அதை அறிந்த பெற்றோர் பள்ளியின் செயலுக்குக்  கண்டனம் தெரிவித்தனர்.