சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்காக சாலையை ஆக்கிரமித்த 8 பேர் கைது

மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது இணைப்புச் சாலையில் ஒரு பகுதியை மூடி, சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தியது தொடர்பாக எட்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

26 முதல் 45 வயதுக்குட்பட்ட அந்தச் சந்தேக நபர்கள் நாளை தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள் என்று குலாய் காவல்துறைத் தலைவர் டான் செங் லீ கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த பிற சாட்சிகளைத் தேடும் பணியிலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை அடையாளம் காணும் பணியிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளதாக டான் தெரிவித்தார்.

நெடுஞ்சாலையில் பந்தயம் தடையின்றி நடப்பதற்காக, ஒரு கும்பல் மற்ற வாகன ஓட்டிகளை வழிமறித்து தடுக்கும் 30 வினாடி காணொளி பரவியத்தைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

 

 

 

-fmt