பெங்கராங் கடற்கரைச் சுற்றுலாவின் போது தந்தையும் மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்

தந்தை, மகன் இருவரையும் பொதுமக்கள் கரைக்கு அழைத்து வந்து, உடனடியாக ஒரு சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

முதலுதவி பணியாளர்கள் வந்தபோது, பொதுமக்கள் பாதிக்கப்பட்டவர்களை ஏற்கனவே கரைக்குக் கொண்டு வந்திருந்தனர்

ஜொகூர் மாநிலம், பெங்கராங்கில் உள்ள கடற்கரை முகாமிடும் பகுதியில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தபோது ஏற்பட்ட சோக சம்பவத்தில், தந்தையும் அவரது 8 வயது மகனும் நேற்று இரவு நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மாலை 7.10 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, பொதுமக்கள் ஏற்கனவே இருவரையும் கரைக்கு கொண்டு வந்திருந்தனர்.

பின்னர் இருவரும் சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் 33 வயதான நிசாம் ஜைனல் மற்றும் அவரது மகன் ஸம்ரி மைக்கேல் என தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது என்று ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.