அம்னோ தலைவர்களை மிரட்ட நீதிமன்ற வழக்குகள் பயன்படுத்தப்படுகின்றனவா?

அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபாமி ஃபாட்சில், அம்னோ தலைவர்களை மிரட்டுவதற்காக நீதிமன்ற நடவடிக்கைகளும் அமலாக்க முகமைகளும் பயன்படுத்தப்படுவதாக சில தரப்பினர் கூறும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

எந்தவொரு வழக்கின் விசாரணையையும் தொடங்குவது அல்லது நிறுத்துவது போன்ற அமலாக்க முகமைகளின் செயல்பாடுகளில், பிரதமர் அன்வார் இப்ராஹிமும் ஒற்றுமை அரசு நிர்வாகமும் தலையிடுவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

லெம்பாகா தபோங் ஹாஜி மற்றும் ஃபெல்டா தொடர்பான சிக்கல்களைக் குறிப்பிட்ட அவர், அவை குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாண்புமிகு பேரரசர் சுல்தான் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.

அம்னோ தலைவர்களை மிரட்டுவதற்காக நீதிமன்ற வழக்குகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது உண்மை அல்ல.

இந்த விஷயம் பிரதமராலோ அல்லது கட்சியாலோ கூறப்படவில்லை, மாறாக இது மாண்புமிகு பேரரசரின் உத்தரவு. அரசாங்கம் மன்னரின் கட்டளையை நிலைநிறுத்த வேண்டும், என்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் கூறினார்.

இந்த விவகாரம் அரசாங்கத்திற்குள் இருக்கும் ஒத்துழைப்பை பலவீனப்படுத்தக் கூடும் என்று கேட்கப்பட்டதற்கு, தற்போதைய நிர்வாகம் தனது பதவிக்காலம் முடியும் வரை தனது முழுத் திறனுடன் தொடர்ந்து பணியாற்ற முடியும் என்று தான் நம்புவதாக ஃபஹ்மி தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்னோ பொதுச் சபைக் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, சட்ட அமலாக்க முகமைகளையும் தேசிய நிறுவனங்களையும் அரசியல் கருவிகளாகப் பயன்படுத்தும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அழைப்பு விடுத்தார்

தனியாகப் பேசிய அம்னோ பொதுச் செயலாளர் அஸ்ரஃப் வஜ்டி டுசுகி, கட்சியும் அதன் தலைவர்களும் மிரட்டல், அவதூறு மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருவதாகக் கூறினார்.

அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதைத் திட்டவட்டமாகக் கூறவில்லை என்றாலும், பல மூத்த கட்சித் தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரது இந்தக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

 

-fmt