தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு வெளியே கல்வி பயிலும் B40 குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு உயர் கல்வி அமைச்சகத்தை அம்னோ தலைவர் அகமத் ஜாஹித் ஹமிடி கேட்டுக்கொண்டுள்ளார்.
அம்னோ பொதுக்குழுவில் பேசிய ஜாஹித், இந்த விஷயம் குறித்து பரிசீலனை செய்யுமாறு உயர் கல்வி அமைச்சர் ஜம்ப்ரி அப்துல் காதிரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
ஜொகூர், நெகிரி செம்பிலான், பகாங், பேராக் மற்றும் மலாக்கா ஆகிய அம்னோ தலைமையிலான மாநில அரசுகளின் முதல்வர்கள், தங்கள் மாநிலங்களில் இருந்து சபா மற்றும் சரவாக்கில் பயிலும் B40 மாணவர்களுக்கு இலவச டிக்கெட்டுகளை வழங்குமாறு தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று, சபா அம்னோ பிரதிநிதி அசுவான் மர்ஜான் @ நோர்ஜான், சபா மற்றும் சரவாக்கைச் சேர்ந்த B40 மாணவர்கள் எதிர்கொள்ளும் அதிகப்படியான விமானக் கட்டணங்கள் குறித்த கவலைகளை எழுப்பினார்.
-fmt
























