பூமித்ராக்களுக்குத் தேர்தல்-பிந்திய வெகுமதிகளை அள்ளிக் கொடுக்கிறார் நஜிப்

1 najibபிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பூமித்ராக்களின் பொருளாதார நிலையை மேலும் உயர்த்தும் பல்வேறு நடவடிக்கைகளை இன்று அறிவித்தார்.

அந்நடவடிக்கைகள்  கடந்த பொதுத் தேர்தலில் பூமிபுத்ராக்கள் அளித்த ஆதரவுக்குக் கைமாறாகும் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

அண்மைய 13வது பொதுத் தேர்தலில் மலாய்க்காரர்களும் பூமிபுத்ராக்களும் வழங்கிய ஆதரவின் அடிப்படையில் அரசாங்கம் இந்த வியூகங்களையும் அணுகுமுறைகளையும் விரைந்து மேற்கொள்வதாக அவர் சொன்னார்.

“கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர், பூமிபுத்ராக்கள் தங்கள் எதிர்காலம் குறித்து கவலைகொண்டு தெரிவித்த பல்வேறு கருத்துகள் குறைகூறல்கள் எங்களுக்குக் கேட்டது.

“ஆமாம், தெளிவாகவே கேட்டது”, என்றாரவர்.