ஜாஹிட்: என்ஜிஓ-கள் ‘குற்றவாளிகளுக்கு’ ஆதரவாக பேசக்கூடாது

1 hamidiகுற்றத் தடுப்பு  சட்ட எதிர்ப்பு என்பது  ‘குற்றவாளிகளுக்கு’ ஆதரவாக மாறிவிடக்கூடாது என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி எச்சரித்துள்ளார்.

“வழக்குரைஞர்களோ, தனிப்பட்டவர்களோ, என்ஜிஓ-களோ குற்றவாளிகளின் செயல்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது”.

குற்றத் தடுப்புச் சட்டத்தில் கொண்டுவரப்படும் திருத்தம், விசாரணையின்றி காவல் என்ற நிலையை மீண்டும் கொண்டு வந்துவிடும் என்று கூறி அதற்கு  எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவது குறித்து புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்தபோது அஹ்மட் ஜாஹிட் இவ்வாறு கூறினார்.

அரசாங்கத்தின் நல்ல நோக்கத்தை வழக்குரைஞர்களும் என்ஜிஓ-களும் சந்தேகக் கண்கொண்டு நோக்கக்கூடாது என்றும் அச்சட்டத் திருத்தம் குற்றவாளிகளைக் குறி வைத்துதான் கொண்டு வரப்படுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

TAGS: