சித்ரவதை செய்யப்படுவதாக பிரதமருக்கு உதயகுமார் கடிதம்

 

uthayaகாஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் தாம் சிறையில் தாம் தொடர்ந்து  சித்ரவதை செய்யப்படுவதாக பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் புகார் செய்துள்ளார்.

“தீய நோக்கத்துடன் நான் காஜாங் சிறையில் மிகவும் அஞ்சப்படும் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் 27 நாள்களாக அடைத்து வைக்கப்படிருக்கிறேன்”, என்று அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

அக்கடிதம் பிரதமர் நஜிப் மற்றும் உள்துறை அமைச்சர் ஸாகிட் ஹமிடி ஆகியோரின் அலுவலகங்களுக்கு நேற்றும் பேக்ஸ் செய்யப்பட்டது.

“நான் தனி அறைச் சிறையில் தனியாக ஒரு நாளில் 24 மணி நேரமும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறேன். சூரிய ஒளியோ சுத்தமான நல்ல காற்று இல்லாத, மங்கலான ஒளியுடைய அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளேன்”, என்று அவர் கூறுகிறார்.

தம்மை காஜாங் சிறையிலுள்ள மருத்துவப் பிரிவில் மீண்டும் வைக்குமாறு அவர் நஜிப்பை கேட்டுக் கொண்டுள்ளார்.

TAGS: