மூன்று இல்லாமைகளை அகற்றுவோம்; அமோகமாகத் தீபத்திருநாளை கொண்டாடுவோம்

xavier-jayakumar-pkr-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர், அக்டோபர் 30, 2013.

அன்பான மலேசியர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில்  மகிழ்ச்சியடைகிறேன்.

நமது இதிகாசங்கள் நமக்கு  உணர்த்த முற்படும் அற்புதங்களுக்கு  அளவே இல்லை. ஆனால் அவ்வப்போது வாழ்ந்த நம் முன்னோர்களும், நாமும் இதிகாசங்களில் உள்ளவைகளை புரிந்து கொள்ளாமல், சொல்லி வைத்ததை  விளங்கிக் கொள்ளாமல், நம்முள் மூன்று அசுரன்களைச் சுமந்து, வெளியில் அரக்கனைத் தேடித் துன்பப்படுகிறோம்.

கங்கா ஸ்நானம்  செய்வோம், மேனியிலுள்ள கசடுகளை அகற்றிடுவோம்,

தீபவொளியில் நம் உள்ளும் புறமுள்ள இருளை அகற்றிடுவோம்,

இனிப்பை அளித்துப் பகை, வெறுப்பை அழித்திடுவோம்,

நம்முள்ளுள்ள அறியாமை, கல்லாமை, இல்லாமை அசுரர்களை ஒழித்திடுவோம்.

அவை நம் சந்ததியை மீண்டும் தகர்க்காமல் செய்திடுவோம்,

இத் தீபத்திருநாளில் சமூகத்தில், இம் மூன்று அரக்கர்களை ஒழிக்கச்சபதம் எடுத்திடுவோம்

அன்னை மஹா இலட்சுமியை வீட்டிற்கு அழைத்திடுவோம்,

அறியாமை, கல்லாமை, இல்லாமையற்ற அன்றே நமக்கு ஆனந்தத் தீபாவளி,

அம் மூன்றையும் அகற்றும் நாளே நமக்கு நன்னாள், அமோகத் தீபத்திருநாள்.

இந்நன்னாளில் எல்லா இந்துக்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துகளைத்

தெரிவித்துக்கொள்கிறேன்.

TAGS: