சிரிய ஜனாதிபதி போர்க்குற்றவாளி: நவநீதம்பிள்ளை குற்றச்சாட்டு

bashar_al_assad_001சிரிய ஜனாதிபதி பஸார் அல் அசாத் உட்பட்ட உயரதிகாரிகளுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளுக்காக சாட்சியங்களையும் முன்வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

சிரியாவின் ஜனாதிபதி அஸாத் மீது ஐக்கிய நாடுகள் நேரடியாக போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை இதுவே முதல்தடவையாகும்.

ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின்படி சிரிய உள்நாட்டு போரில் ஓரு லட்சம் பேர் பலியாகியுள்ளனர்