தெற்கு சூடான் மக்களை கைவிட மாட்டோம்: ஐநா அதிகாரிகள்

south_sudanதெற்கு சூடான் மக்களை கைவிட்டு விடப்போவதில்லை என அங்குள்ள ஐநா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கடந்த ஒருவார காலமாக நடந்துவரும் இன வன்முறைகளின் தொடர்ச்சியாக, அங்கு சிவில் யுத்தமொன்று ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.

ஐநா வளாகத்துக்குள் தஞ்சமடைந்துள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இப்போதைக்கு பாதுகாப்பாக இருப்பதாக ஜூபா நகரில் உள்ள ஐநா பேச்சாளர் ஜோசப் கோண்டராஸ் கூறுகிறார்.

ஜூபாவை அண்டியுள்ள பல பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறிவிட்டனர்.

மக்கள் உகாண்டாவின் எல்லையை நோக்கி இடம்பெயர்ந்துவருகின்றனர்.

அதிபர் சல்வா கீயரின் படையினருக்கும் அவரது எதிர்ப்பாளர் ரீக் மஷாருக்கு விசுவாசமான படையினரும் மோதி வருகின்றனர்.

தெற்கு சூடானின் எல்லாப் பகுதிகளுக்கும் இந்த மோதல் பரவியுள்ளமை குறிப்பிட்டதக்கது. -BBC