பிகேஆர் காஜாங் பிரதிநிதி பதவி விலகல்: அங்கு அன்வார் போட்டியிடுவார்?

PKR rep quitsசிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல் காலிட்  இப்ராகிம்  பதவியிலிருந்து  தூக்கப்படலாம்  என்ற  ஊகம்  பரவி  வரும்  வேளையில்  அதற்கு  மேலும்  வலுசேர்ப்பதுபோல்  பிகேஆர்  பிரதிநிதி  ஒருவர்  தம்  சட்டமன்ற  இடத்தைக்  காலி  செய்துள்ளார்.

காஜாங்  சட்டமன்ற  உறுப்பினர்  லீ  சின்  செ, இன்று  பிற்பகல் பெருந் தலைவர்  அன்வார்  இப்ராகிமைச்  சந்தித்த  பின்  பதவிவிலகல்  கடிதத்தைத்  தாக்கல்  செய்தார்.

அன்வார்  போட்டியிடுவதற்கு  இடமளித்துதான்  அவர்  விலகுகிறார்  என்று  ஊகம்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பாஸ் கட்சியின் கமிஷனருமான இஸ்கந்தர் சாமாட், அன்வார் போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தினார்.

பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுடியன் தமக்கு இத்தகவலை அளித்ததாக இஸ்கந்தர் தெரிவித்தார்

leeலீ  தம்  தொகுதியைக்  காலி  செய்தார்  என்பதை சிலாங்கூர்  சட்டமன்றத்  தலைவர்  ஹன்னா  இயோவும்  உறுதிப்படுத்தினார்.

லீயின் பதவி விலகல் கடிதத்தை பெற்றுக்கொண்ட சட்டமன்ற தலைவர் ஹன்னா இயோ லீயின் பதவி விலகலுக்கான காரணம் மற்றும் அன்வார்,  லீயின் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு ஏதுவாக இப்பதவி  விலகல் ஏற்பாடு செய்யப்பட்டதா போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.

“வேட்பாளர் யார் என்பது பற்றியோ, இதர வதந்திகள் பற்றியோ நான் பேச விரும்பவில்லை. இன்றிலிருந்து அத்தொகுதியின் இருக்கை காலியாகி விட்டது. அவ்வளவுதான்”, என்று ஹன்னா கூறினார்.

“அது பிகேஆர் இருக்கை. பிகேஆர்தான் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்சி”, என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

இன்று முன்நேரத்தில், தாம் காலிட் இடத்தை எடுத்துக்கொள்ளப் போவதாக கூறப்படுவதை அன்வார் மறுத்த வேலையில், காலிட்டும் தாம் பதவி விலகுவதாக பேசப்படுவதை நிராகரித்தார்.

இந்த விவகாரம் கசிந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பக்கத்தான் பங்காளி கட்சிகளுக்கு தெரிவிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தது என்று பிகேஆர் வட்டாரம் கூறிற்று.

இதனால் பின்விளைவுகள் ஏற்படலாம் என்பதை அந்த வட்டாரம் ஒப்புக்கொண்டது என்றாலும், இது அவசியமானது என்று வலியுறுத்தப்பட்டது.

சிலாங்கூர் மாநிலத்தில் எழுந்துள்ள பிரச்னைகள் சம்பந்தமாக அன்வார் நாளை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசவிருக்கிறார்.

psm symbolபிஎஸ்எம் போட்டியிடக்கூடும்!

காஜாங் சட்டமன்ற தொகுதி காலியானதைத் தொடர்ந்து, அத்தொகுதியில் நடைபெறப் போகும் இடைத் தேர்தலில் மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) களமிறங்கும்  சாத்தியம் உண்டு.

அத்தொகுதியைச் சேர்ந்த பல வாக்காளர்கள் பிஎஸ்எம் அதன் வேட்பாளர் ஒருவரை அத்தொகுதியில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை கட்சியின் அலுவலகத்திற்கும், அதன் தலைமைச் செயலாளருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இது குறித்து சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளருடன் தொடர்பு கொண்ட போது, “உண்மைதான். கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலான இளைஞர்கள் பிஎஸ் எம் போட்டியிடுவதை விரும்புகின்றனர்”, என்று தலைமைச் செயலாளர் அருட்செலவன் கூறினார்.

“ஆனால், இது குறித்து கட்சிதான் முடிவெடுக்க வேண்டும்”, என்றாரவர்.

 

 

 

 

 

 

TAGS: