போதையில் மிதக்கும் இளைஞர்கள்: ஆய்வில் தகவல்

germans_drink_001ஜேர்மனியில் ஏராளமான இளைஞர்கள் குடிப்பழக்கத்தில் சிக்கியுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

ஜேர்மனியின் அரசாங்க மருத்துவ ஆணையம் அந்நாட்டிலுள்ள குடிக்காரர்களின் எண்ணிக்கையை அறிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.

இதில் கடந்த 2013ம் ஆண்டில் 26,000 இளைஞர்கள் மதுப்பழக்கதினால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த 2012ம் ஆண்டு 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 44 சதவீத இளைஞர்கள், மற்றும் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட 17 சதவீத இளைஞர்கள், மாதந்தோறும் தங்களது குடிப்பழக்கத்தை அதிகரித்து வருவதாக கருத்துக்கணிப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மருந்துவ ஆணையர் மர்லீன் மோர்ட்லர் கூறுகையில், இளைஞர்கள் மத்தியில் மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருப்பது சுகாதாரத்தை சீரழிக்கிறது என்றும் இளைஞர்கள் சமூகத்தின் பொறுப்பு அறிந்து மது அருந்தும் பழக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.