ஹலோ ஐஜிபி, தீவிரமாக தேடி பிரசன்னா டிக்சாவை கண்டுபிடியுங்கள், குலா

 

Indira case1ஜபாதான் அஹாமா பினாங்கு மற்றும் சிலாங்கூர் ஆகியவற்றுக்கு விரைந்து சென்று உதவும் போலீசார் இந்திரா காந்தியின் குழந்தை பராமரிப்பு தீர்ப்பின்படி குழந்தை பிரசன்னா டிக்சாவை இன்னும் தாயார் இந்திரா காந்தியிடம் ஒப்படைக்காமல் இருக்கும் அக்குழந்தையின் மதம் மாறிய தந்தை கே. பத்மநாதன் என்ற முகம்மட் ரித்துவான் பின் அப்துல்லாவை போலீசார் இனிமேலும் தாமதம் செய்யாமல் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று இந்திரா காந்தியின் வழக்குரைஞர் மு. குலசேகரன் இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் போலீசை கேட்டுக் கொண்டுள்ளார்.

போலீசார் அவர்களுடைய கடமையை தவறாது ஆற்ற வேண்டும் என்று வற்புறுத்தும் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினரான குலசேகரன், போலீஸ் செயல்படத் தவறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் போலீஸ்சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப போலீஸ் நடவடிக்கை எடுக்க மறுத்தால், போலீசாரை நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்பணிய வைப்பதற்கான உத்தரவைக் கோரும் மனுவை நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் என்பதைத் திட்டவட்டமாக கூற விரும்புகிறோம். அம்மனுவில் போலீசாரின் நீதிமன்ற அவமதிப்பும் அடங்கும்”, என்று குலா தெரிவித்துள்ளார்.

 

 

 

TAGS: