ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவரான அல் பக்தாதி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசு

isis_leader_001வாஷிங்டன்: ஈராக்கில் உள்நாட்டு கலவரத்தை நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., இயக்கத்தின் தலைவரான அபு பக்கர் அல் பக்தாதி, எங்கு பதுங்கி இருக்கிறார் என்பது குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசு அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு வௌியிடப்பட்ட இந்த அறிவிப்பு இப்போதும் அமலில் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பக்தாதி, ஈராக்கில் தான் பிடித்து வைத்துள்ள நகரங்களை கொண்டு, தனி நாடு திட்டத்தை பிரகடனப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.