டிஏபி புவாமீது நஜிப் அவதூறு வழக்கு

pua najibபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  சர்ச்சைக்குரிய  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்  பற்றி பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி   புவா  ஆற்றிய  உரைக்காக  அவர்மீது   அவதூறு  வழக்கு   தொடுத்துள்ளார்.

மலேசியப்  பிரதமர்  ஒருவர்  நாடாளுமன்ற  உறுப்பினர் ஒருவர்மீது  வழக்கு  தொடுப்பது  இதுவே  முதல்  முறையாகும்.

நஜிப்புக்காக  ஹபாரிஸாம்,  வான் அய்ஷா  மற்றும்  முபாராக்  சட்ட  நிறுவனம்  அவ்வழக்கைக்  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்  நேற்று  பதிவு  செய்தது.

கடந்த  நவம்பரில், ஒரு  விருந்தில்  புவா  ஆற்றிய  உரையை  அடிப்படையாகக்  கொண்டு  வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அதில், 1எம்டிபி  நிறுவனத்தின்  நிதியிலிருந்து  நஜிப்  மக்களின்  பணத்தை  எடுத்துக்கொண்டதாக  புவா  கூறினாராம்.

ஹபாரிஸாமைத்  தொடர்பு  கொண்டபோது  வழக்கு  பதிவு  செய்யப்பட்டிருப்பதை  உறுதிப்படுத்தினார். ஆனால், அதில்  உள்ள  விவரங்களைத் தெரிவிக்க  மறுத்தார்.