பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சர்ச்சைக்குரிய 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் பற்றி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா ஆற்றிய உரைக்காக அவர்மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
மலேசியப் பிரதமர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்மீது வழக்கு தொடுப்பது இதுவே முதல் முறையாகும்.
நஜிப்புக்காக ஹபாரிஸாம், வான் அய்ஷா மற்றும் முபாராக் சட்ட நிறுவனம் அவ்வழக்கைக் கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் நேற்று பதிவு செய்தது.
கடந்த நவம்பரில், ஒரு விருந்தில் புவா ஆற்றிய உரையை அடிப்படையாகக் கொண்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அதில், 1எம்டிபி நிறுவனத்தின் நிதியிலிருந்து நஜிப் மக்களின் பணத்தை எடுத்துக்கொண்டதாக புவா கூறினாராம்.
ஹபாரிஸாமைத் தொடர்பு கொண்டபோது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார். ஆனால், அதில் உள்ள விவரங்களைத் தெரிவிக்க மறுத்தார்.
மக்கள் பணத்தைக்கொண்டு செய்த முதலீட்டு கணக்கு வழக்குகள் முறையே இருப்பின் நியூ யார்க் டைம்ஸ் மற்றும் சரவாக்
ரிப்போர்ட் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாமே!!! அல்லது முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மீது வழக்கு தொடுக்கலாமே??
தலைமை நிர்வாகத்தில எத்தனையோ மாற்றங்கள். அனைத்துலக தரம் கொண்ட கணக்காய்வு நிறுவனம் பின்வாங்கல் ரிங்கிட்டின் மதிப்போ உலு கம்பத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. விலையேற்றமோ சவூதி அரேபியாவை நோக்கி பீடுநடை போடுகின்றது. அந்நிய நாட்டு தகவல் ஊடகங்கள் மலேசியாவின் மந்த நிலைக்கு இந்த முதலீட்டு திட்டமும் ஒரு முக்கியக் காரணம் என்று பொரிந்துத் தள்ளுகிறது. இவர்கள் மீது எப்போது சட்ட நடவடிக்கை ??????
என்னப்பா இந்த விவகாரத்தில் யாருடைய கருத்தையும்/ காமனையும் காணோம்???
ஷாந்தி / சிவா கணபதி, நீங்களாவது ????