குற்றமிழைத்தவர்களைப் பாராட்டுவதை எதிர்த்து எம்ஏசிசி-க்கு எதிரில் என்ஜிஓ ஆர்ப்பாட்டம் செய்யும்

tbhடிஏபி  உதவியாளர்  தியோ  பெங்   ஹோ-வின்  மரணத்தில்  சம்பந்தப்பட்ட  மூன்று  மலேசிய  ஊழல்-தடுப்பு ஆணைய  (எம்ஏசிசி)  அதிகாரிகளுக்கு  எதிராக  அரசாங்கம்  நடவடிக்கை  எடுக்காததை  ஆட்சேபித்து  ஒரு  என்ஜிஓ  அடுத்த  வாரம்  ஷா ஆலமில் எம்ஏசிசி  தலைமையகத்துக்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபடும்.

சம்பந்தப்பட்ட  அதிகாரிகளில்   இருவரின்  செயல்கள்  தியோவின்  மரணத்துக்குக்  காரணம்  எனக் கடந்த  செப்டம்பரில்  முறையீட்டு  நீதிமன்றம்  தீர்ப்பளித்தும்கூட  அவர்களுக்குப்    பதவி  உயர்வு  வழங்கப்பட்டிருப்பதற்கு ஜனநாயகத்துக்கான  தியோ  பெங்  ஹொக்  அறக்கட்டளைக்  கண்டனம்  தெரிவித்தது.

“இது (பதவி உயர்வு) ஒரு  குடிமகனின்  உயிரிழப்புக்குக்  காரணமானவர்களுக்கு  வெகுமதி  அளிப்பதற்கு  ஒப்பாகும்  என்பதால்   கடுமையாகக்  கண்டிக்கிறோம்”, என்று  அது  ஓர்  அறிக்கையில் கூறிற்று.