மகாதிர் ‘ரோஸ்மாவின் டாம்பீகம்’ பற்றிக் கிண்டலடித்ததை நாளேடுகள் கண்டுக்கொள்ளவில்லை

lavபிரதமரின்  மனைவி  ரோஸ்மா  மன்சூர் “ஆடம்பர” வாழ்க்கை  வாழ்வதாக  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறியிருப்பதை  மலாய்மொழி  நாளேடுகள் எதுவும்  ஆங்கில  நாளேடுகளில் பலவும்  வெளியிடவே இல்லை.

சன் -இலும்  சீன  நாளேடுகளிலும்  மட்டுமே  அச்செய்தி  வெளியாகி  இருந்தது.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  பல  குற்றம்குறைகள்  சொல்லப்படுவதால் அதன்  காரணமாக  அவர்  பதவி  விலக  வேண்டும்  என்பதை  ஏப்ரல்  2-இலிருந்து  வலியுறுத்திவருகிறார்  மகாதிர்.

நேற்று, அவர்  நஜிப்பின் தனிப்பட்ட  வாழ்க்கையும்  “சரியில்லை”  என்றார்.

“ஆனாலும்  அவற்றை-அவரும்  அவரின்  மனைவியும் வாழும்  ஆடம்பர  வாழ்க்கைமுறை  உள்பட- பொருட்படுத்த  வேண்டாம்  என்றுதான்  நினைத்திருந்தேன்”, என்று  முன்னாள்  பிரதமர்  அவரது  வலைப்பதிவான chedet.cc-இல்  பதிவிட்டிருந்தார்.

ஆளும்  அம்னோ  கட்சியின்  பெரும்புள்ளி  ஒருவர்  நஜிப்  மற்றும்  ரோஸ்மா  ஆடம்பர  வாழ்க்கை  வாழ்வதாகக்  கூறி  இருப்பது  இதுவே  முதல்முறையாகும்  என  நம்பப்படுகிறது.