‘அவதூறு கூறும் சுவரொட்டிகள்’மீது இசி விசாரணை நடத்த வேண்டும்

posterபெர்மாத்தாங்  பாவில்  பினாங்கு  மாநில  அரசுக்கு  எதிராக  அவதூறு  கூறும்  சுவரொட்டிகள்  காணப்படுவது  பற்றி  தேர்தல்  ஆணையம்(இசி)  விசாரணை   நடத்த  வேண்டும்  என  டிஏபி  நாடாளுமன்ற  உறுப்பினர்  ஸ்டீபன்  சிம் விரும்புகிறார்.

புக்கிட்  மெர்தாஜாமில்  தமது  நடவடிக்கை  மையத்தில் அச்சுவரொட்டிகளைக்  கண்டதாக  சிம்  தெரிவித்தார். அவை “அவதூறானவை”  என்பதுடன் “தப்பான  தகவல்களை”யும்  கொண்டிருந்தன.

“இசி  இச்சுவரொட்டிகளை ஆராய  வேண்டும். இது பக்கத்தான்  ரக்யாட்டின்  பெயரைக்  கெடுக்கும்  ஒரு  முயற்சி”, என  பெர்மாத்தாங்  பாவில்  பிகேஆரின்  அன்றாட  செய்தியாளர்  கூட்டத்தில்  சிம்  கூறினார்.

சுவரொட்டிகளில்  பெயர்கள் இல்லை. ஆனாலும், அவை  எங்கிருந்து  வந்திருக்கும்  என்பதை  “ஊகிப்பது” எளிது  என்றாரவர்.