மே 5-இல் பொது விடுமுறை அளிப்பது பற்றி பகாங் ஆலோசனை

adnanபகாங்  மாநில  அரசு, ரொம்பினில்  வாக்காளர்கள்  வாக்களிப்பதை  ஊக்குவிக்க  அடுத்த  செவ்வாய்க்கிழமையை (மே5) பொது  விடுமுறை நாளாக  அறிவிக்கலாமா  என  ஆலோசித்து  வருகிறது.

இன்றைய  மாநில  ஆட்சிக்குழுக்  கூட்டத்தில்  அப்பரிந்துரை விவாதிக்கப்பட்டு  முடிவெடுக்கப்படும்  என  மந்திரி  புசார்  அட்னான்  யாக்கூப்  கூறினார்.

ரொம்பினில் இன்று  ஏழாம்  நாளாக  இடைத் தேர்தல்  பரப்புரைகள்  நடைபெற்று  வருகின்றன. போட்டியிடும்  இரு  தரப்புகளும்  பிரச்னை  ஏதுமின்றி  சுமூகமாக பரப்புரைகளை  மேற்கொண்டு  வருவதாக  அட்னான்  கூறினார்.