ஐஎஸ் நடவடிக்கைகளில் குழந்தைகள் உள்பட 154 மலேசியர்கள்

isஉள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  குழந்தைகள் உள்பட  154 மலேசியர்கள்  ஐஎஸ் நடவடிக்கைகளில்  ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

“1-இலிருந்து 60வயதுள்ளவர்  வரை ஐஎஸ் கிளர்ச்சிக்  கும்பலில்  இருக்கிறார்கள்.

“குழந்தைகளும்  அதில்  இருப்பதுதான்  கவலையளிக்கும் விசயமாகும்”, என்  ஹமிடி, அம்னோவின்  தானா   ராத்தா  எம்பி இக்மால் ஹிஷாமுக்கு  வழங்கிய  எழுத்துவடிவிலான  பதிலில்  கூறினார்.

ஆனால்,  அதில்  உள்ள  குழந்தைகளின்  எண்ணிக்கை  பற்றியோ  அவர்கள்  ஐஎஸ்  நடவடிக்கைகளில்  எப்படிப்  பயன்படுத்திக்  கொள்ளப்படுகிறார்கள்  என்பது  பற்றியோ  அவர்  எதுவும்  தெரிவிக்கவில்லை.

154 -இல்  91-பேர்   மத்திய  கிழக்கில்  சண்டை  நடக்கும்  இடத்துக்குப்  புறப்பட்டுச்  செல்வதற்குமுன்பே  கைது  செய்யப்பட்டனர்  என்றாரவர்.

45 மலேசியக்  குடிமக்கள்  மத்திய  கிழக்கில்  சண்டைகளில்  கலந்து  கொண்டிருக்கிறார்கள். போரிடும்போது  11பேர் கொல்லப்பட்டனர். எஞ்சிய  எழுவர்  திரும்பி  வந்தனர். அவர்களில்  அறுவரைப்  போலிசார்  கைது  செய்துள்ளனர். ஒருவர்  தப்பி  ஓடி  விட்டார்.