பண்டிகார்: மகாதிர் பொய் சொல்லவில்லை; நானும் சொல்லவில்லை

tunமக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா, தம்  பதவி விலகல்  பற்றி  முன்னாள்  பிரதமர் டாக்டர்  மகாதிர்  முகம்மட்  தெரிவித்தது  பொய்யல்ல  என்கிறார்.

“மகாதிர்  பொய்  சொல்லவில்லை, நானும்  சொல்லவில்லை.

“இதெல்லாம்  பிரதமருக்குத்  தெரியும்”, என  பண்டிகார்  இன்று  அவரது  இல்லத்தில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

பண்டிகார்  பதவி  விலகப்போவதாக  கடந்த  சனிக்கிழமை  மகாதிர்  தெரிவித்திருந்தார். ஆனால், சில  மணி  நேரம்  கழித்து  அதை  மறுத்து  பண்டிகார்  அறிக்கை  ஒன்றை  விடுத்திருந்தார்.

இதனால்  மகாதிருக்கு  சங்கடமாக  போய்விட்டது.

மகாதிரைக் சங்கடத்துக்குள்ளாக்கும்  நோக்கம்  தமக்குச்  சிறிதும்  இல்லை  என்று  கூறிய பண்டிகார், நஜிப்பைக்  கவிழ்ப்பதில்  தீவிரம்  காட்டும்  முன்னாள் பிரதமர்  தங்களுக்குள்  தனிப்பட்ட  முறையில்  நடந்த உரையாடலை  அவசரப்பட்டு  வெளியில்  சொல்லி  விட்டார்  என்றார்.

தம்  உள்ளக்கிடக்கையை   மகாதிரிடம்  சொன்னதாகவும்  அவர்  அதை அப்படியே  போட்டுடைப்பார்  என்பதை  எதிர்பார்க்கவில்லை  என்றும்  அவர்  சொன்னார்.

“முதலில், துன்னிடம்  மன்னிப்பு  கேட்டுக் கொள்கிறேன்”, என்றாரவர்.

நஜிப், மகாதிர்  பூசலில் தாம்  சம்பந்தப்பட  விரும்பவில்லை  என்றும்  மக்களவைத்  தலைவர்  பதவியைத்  தொடரவே  விரும்புவதாகவும்  பண்டிகார்  கூறினார்.